Tuesday 6 December 2016

[www.keralites.net] 07-12-2016 திருச்சி நா.பிரசன்னா-வின் இன்றைய குறுந்தகவல் [1 Attachment]

 




Subject: 07-12-2016 திருச்சி நா.பிரசன்னா-வின் இன்றைய குறுந்தகவல்

Wait, 
 
Animated Picture
My Whatsapp Number:   9791714474
என்னுடன் Whatsapp ல் இணைய விரும்புகிறவர்கள் எனக்கு வேண்டுகோள் அனுப்பும்போது       
பெயர்,
இருப்பிடம்,
மொழி
இவற்றை அவசியம் குறிப்பிடவும்
 
 
07-12-2016  திருச்சி நா.பிரசன்னா-வின் இன்றைய குறுந்தகவல்
 
df81bf5d849c6b576ff0695d60b31116.gif
71216t.jpg
 
 
தூத்துக்குடி  தர்மராஜின்  இன்றைய  செய்தி\
 
.Inline image
கார்த்திகை மாதச் சொமவாரத்தின் பெருமை
 
 
நாரதர் சொல்லத் தொடங்கினார்பாண்டுபுத்திரனே! சிறந்த அரசனே!
 
கார்த்திகை மாதச் சொமவாரத்தின் பெருமையைக் கூறுகிறேன், கேள். சோமவாரத்தில் ஒருவன் விரதத்துடன் இருந்தால் அளவற்ற பயனை அவன் அடைவான். விரதங்களுக்குள் சிறந்த விரதம் பித்ருக்களுக்குத் திருப்தியை அளிக்கக் கூடியது. மாதங்களுக்குள் துலா மாதமும் கார்த்திகை மாதமும் எப்படிச் சிறந்தனவோ அப்படியே கார்த்திகை மாதச் சோமவாரம் மிக்க சிறப்பு வாய்ந்தது.
 
கார்த்திகை மாதத்திய முப்பது தினங்களுமே மிகச் சிறந்தவை. ஸர்வேச்வரனின் விஷ்ணுவின் கோயில்களில் தீபாராதனம் செய்வதற்கு உரிய நாட்கள் இவை. இந்த முப்பது தினங்களும் மகா விஷ்ணுவின் கோயிலில் தீபங்களை ஏற்றி வைக்கிறவனுடைய பித்ருக்கள் வலிய பாவங்களை செய்து நரகத்தில் இருந்த போதிலும் ஸ்வர்க்கத்தை அடைவார்கள்.
 
இம் மாதத்திய ஸோம வாரத்தன்று ஸர்வேச்வரனின் கோயிலில் நெய்யைக் கொண்டு விளக்கு ஏற்றுகிறவன் தன் குலத்தில் இருந்த பித்ருக்களை நரகத்திலிருந்து விடுவிப்பான். அவன் முன்னோர் நற்கதியைப் பெறுவர்.
 
இந்த தினத்தில் சிவபூஜை செய்கிறவன் ச்ரத்தையுடன் செய்ய வேண்டும். தங்கம் திருடுதல், கள் குடித்தல், ப்ராஹ்மணனைக் கொல்லுதல் முதலிய வலிய பாவங்களை அவன் செய்திருந்த போதிலும் அவை இவனிடத்திலிருந்து விலகிவிடும்; தீயில் பட்ட பஞ்சு போலாகிவிடும்.
 
இந்த மாதத்தை நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அரச மரத்தின் நிழலில் அந்த மரத்தின் இலைகளை கொண்டு விஷ்ணுவை அர்ச்சிக்க வேண்டும். அதனால் உயர்ந்த அறிவை பெறுவான். விஷ்ணுவின் கோயிலில் ஆயிரம் விளக்குகளை கார்த்திகை மாதத்தில் கிருத்திகை என்னும் நக்ஷத்திரம் சேரும்போது ஏற்ற வேண்டும். அப்படி ஏற்றுகிறவன் பிணியிலிருந்து விடுபடுவான்; ஸகல ஆரோக்யத்துடன் விளங்குவான்.
 
அஷ்ட ஐச்வர்யங்களுடன் திகழ்வான். மாக மாதத்தில் பிரயாகையில் நூறு வருஷம் ஸ்நானம் செய்பவன் அடையும் பலனை விஷ்ணு கோயிலில் விளக்கு ஏற்றுகிறவன் அடைவான்.
 
ஸோமவாரத்தில் சிவலிங்கத்தை ஓர் அந்தணருக்குக் கொடுக்க வேண்டும். அது உயர்ந்த தர்மமாகும். அந்த தர்மத்தின் பயனை வாயாலும் சொல்ல முடியாது. எம்பெருமானுக்குக் கோயில்களில் தீபாராதனம் அர்ச்சகர்கள் செய்கின்றனர். பிறகு தீபம் எரியும்போது தங்கள் விரல்களால் அதை தொட்டு தங்கள் உடலில் தடவி கொண்டால் குஷ்டரோகம் நீங்கிவிடும். ஜுரம் முதலிய நோய்கள் விலகும்.
 
எம்பெருமானுக்கு ஆராதனம் செய்யும்போது தூபத்தையும் தீபத்தையும் ஸமர்ப்பிக்க வேண்டும். இவை இரண்டும் இல்லாமல் ஆராதனம் செய்தால் புகை சூழ்ந்த நரகத்தை அடைவான்; குருடனாகவும் பிறப்பான்; கோட்டானாகவும் பிறப்பான்.
 
நியமத்துடன் ஸோமவாரத்தில் உபவாசமும் இரவில் விழிப்பும் செய்பவன் சிவஸாயுஜ்யத்தை அடைவான். கங்கை முதலிய புண்ய நதிகளில் ஸ்நானம் செய்தால் எல்லாவகையிலும் பரிசுத்தி உண்டாகும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.
 
கங்கை முதலிய நதிகளில் ஸ்நானம் செய்தால் எல்லாவகையிலும் பரிசுத்தி உண்டாகும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. கங்கை முதலிய நதிகளில் ஸ்நானம் செய்ய வேண்டாம்; இறைவனுக்குத் தூபாராதனத்தை செய்து அதில் உண்டான பஸ்மத்தை (சாமபலை) உடலில் பூசிக் கொண்டால் போதும்; ஸர்வ பாபங்களினின்றும் விடுபடுவான். அபஸ்மாரம், குல்மரோகம், குஷ்டம், ஜுரம் முதலிய நோய்களை, ஒரு மண்டலம் தூப பஸ்மத்தை உடலில் தேய்த்துக் கொள்பவன் போக்கடித்துக் கொள்வான்.
 
கங்கை யமுனை கோதாவரி முதலிய நதிகளுக்கு எப்படி நாம் செல்லமுடியும் என்று நாம் வருந்த வேண்டாம். அங்கே சென்று ஸ்நானம் செய்வதனால் உண்டாகும் பலனை ஒரு நோடியிலேயே தூப பஸ்மத்தை உடலில் தரித்துக் பெறலாம். தூப பஸ்மத்தை உடலில் தரித்து ச்ராத்தத்தைச் செய்பவன் கயா ச்ராத்த பலனைப் பெறுவான். இப்படி செய்வதனால் நரகத்திலுள்ள இரு குலத்து பித்ருக்களும் அதே க்ஷணத்தில் ஸ்வர்க்கத்தை பெற்றுவிடுவார்கள்.
N Jambunathan (Ex: REVL & IMPAL)
Rengarajapuram-Kodambakkam-Chennai-Mob:9176159004
 
 


__._,_.___
View attachments on the web

Posted by: prasannam n <iampresanam@yahoo.co.in>
Reply via web post Reply to sender Reply to group Start a New Topic Messages in this topic (1)

Check out the automatic photo album with 1 photo(s) from this topic.
71216t.jpg

Have you tried the highest rated email app?
With 4.5 stars in iTunes, the Yahoo Mail app is the highest rated email app on the market. What are you waiting for? Now you can access all your inboxes (Gmail, Outlook, AOL and more) in one place. Never delete an email again with 1000GB of free cloud storage.

KERALITES - A moderated eGroup exclusively for Keralites...

To subscribe send a mail to Keralites-subscribe@yahoogroups.com.
Send your posts to Keralites@yahoogroups.com.
Send your suggestions to Keralites-owner@yahoogroups.com.

To unsubscribe send a mail to Keralites-unsubscribe@yahoogroups.com.

Homepage: http://www.keralites.net

.

__,_._,___

No comments:

Post a Comment